தீய சிந்தை

91

ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்
தீயுறு தீச்சிந்தை யாம்.

 

.விருப்பு வெறுப்புகளை வளர்க்கும் தீய எண்னங்கள் கொடிய பாபத்திற்குக் காரணமான தீச்சிந்தை எனப்படும்.


பாப உபதேசம்

92 சோஆள், விலைகொளல் கூறுதல் கூட்டதல்
பாபஉப தேசம் எனல்
 

பறவை, விலங்கு, அடிமைகள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் கொள்ளவும் கவரவும் வழி கூவடைப் பாபோபதேசம் என்பர்.


 

பயனில் செயல்

93

பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயமஇல் பமாதம் எனல்.

காரணமிண்றி தாவரங்களை அழிப்பதும் , பூமியை அகழ்வதும் பயனற்ற ‘பிரமாதம்” எனப்படும்.
 


 

கொலை கொடுத்தல்

94

தீகருவி, நஞ்சு, கயிறு, தடி, நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம்

கொடிய கொலைக்கருவிகளையும், தீ,நஞ்சு, கயிறு, தடி, நார் போன்றவற்றையும் தானமாக வழங்குதல் ‘ஹிம்சாதானம்’ எனப்படும்.


 

தீயன கேட்டல்

95

மோகத்தை ஈன்று தவம் ழிக்கும் சொற்கேட்டல்
பாவச் சுருதி எனல்

 

ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் ‘ பாவச் சுருதி’ எனப்படும்.