| விரதமின்மையால் கேடடைந்தவர்கள் | |
| 81 |
தனசிரி சத்தியன் தாபதன் காப்பான் |
|
தனஸ்ரீ, சத்தியகோடன்,உறித்தாபதன், தளவரன், தாடிவெண்ணெய்காரன் ஆகிய ஐவரும் அணுவிரதம் இல்லமையால் கேடு அடைந்தமைக்குச் சன்றாவர். |
|
|
|
|
|
எட்டு மூலகுணம் |
|
| 82 |
கள்ளொட் தேன்புலைசு உண்ணாமை ஐவதமும் தெள்ளுங்கால் மூல குணம் |
|
புலால் உண்ணாமை, கள்குடியாமை, தேன் அருந்தமையொடு மேற்கூறிய ஐந்து அணுவதமும் தெளியுங்கால் மூல குணம் எனப்படும். |
|
|
|
|
|
குணவிரதம் திசை விரதம் |
|
| 83 |
வரைப திசைபத்தும் வாழும் அளவும் |
|
வாழ்நாள் முழுவதும் திசை பத்திலும் குறித்த தொலைவுக்கு மேல் செல்லுதல் இல்லை என உறுதி எடுத்தல் குற்றமைல்லாத திசை விரதமாம். |
|
|
|
|
|
திசை விரத எல்லைகள் |
|
| 84 |
ஆறும் மலையும் கடலும் அடவியும் |
|
ஆறு, மலை, கடல், காடு, இவற்றை எல்லையகக் கொள்ள வேண்டும் என்று அறிஞர் கூறுவர். |
|
|
|
|
|
மகாவிரதம் |
|
| 85 |
எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின் |
|
வரையறுத்த எல்லைக்கப்பால் நடைபெறும் பாபங்கள் அணு விரதியைச் சேராமையால் இவ்விரதத்தை மாவிரதத்தோடு ஒப்பாக சொல்லுவர். |
|
|
|