அணுவிரதம்

66

பெரிய கொலைபொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து.

 

இயங்குயிர்களைக் கொல்லாமை, பொய் கூறாமை, திருடாமை,பிறர்மனை விரும்பாமை,மிகுபொருள்விரும்பாமை என அணுவதம் ஐந்தாகும்.


 

கொல்லாமை

67 இயங்குயிர்கொல்லாமை, ஏவாமை ஆகும்
பெருங்கொலையின் மீட்சி எனல்
 

இயங்குயிரைத் தான் கொல்லாமலும் கொல்லுவித்தல் செய்யாமலும் இருத்தல் இயங்குயிர் கொல்லாமை அணுவதம் ஆகும்.


 

அதிசாரம் ஐந்து

68

அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்
இறப்பப் பொறைஇறப்புஒர் ஐந்து

உறுப்பைக் குறைத்தலும், அடித்து வருத்துதலும், நெருங்க அடைத்து வைத்தலும், கயிறு முதலானவற்றால் கட்டிப்போடுதலும், மிகுபளு எற்றலூமாகிய ஐந்தும் அதிசாரமாம்.
 


 

பொய்யாமை

69

பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும் இரண்டாம் வதம்.

பாவத்திற்குக் காரணமனவ்ற்றைப் பேசாது இருத்தலும், பிறரைப் பேச ஏவாது இருத்தலும் பொய் கூறாமை எனும் இரண்டாவது வதமாகும்.


70

குறளை மறைவிரி, இல்லடை வௌவல்
புறவுரை பொய்ஓலை கேடு

 

கோள் சொல்லலும், இரகசியங்களைக் கூறலும், ஒப்படைத்த பொருளை இல்லை என்றலும், உண்மைக்கு மாறாக உரைத்தலும், பொய்க்கடிதம் எழுதுதலும் பொய்யாமைக்குக் கேடாம்.