அருக பதவி

56

முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சி யவர்

 

ஆசையை அறுக்கும் காட்சியுடையவர் இந்நிரபதவி, மன்னர்பதவி,அருகபதவியோடு வீடுபேறும் பெறுவர்.


 

நல் ஞானம்

57 பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல்
மருள்அறு நல்ஞா மாண்பு.
 

உயிர் முதலாகிய ஒன்பது பொருள்களின் உண்மை இயல்பை உள்ளவாறு உணர்தல் மயக்கம் அறுக்கும் நல் ஞானத்தின் பெருமையாம்.


 

ஆகமங்கள்

58

சரிதம் புராணம் அருத்தக் கியானம்
அரிதின் உரைப்பது நூல்

(சிறப்புடை ஒருவர் வரலாறு கூறும்) சரிதமும் ,(மகாபுருடர்களின் வரலாறு வரலாறு) புராணமும், ( நான்கு புரு ஷார்த்தங்களைக் கூறும் ) அருத்தக் கியானமும் ' பிரதமாநுயோகம்' நூலாம்.


59

உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவுஇன்று உரைப்பது நூல்

உலக அமைப்பையும், கால நிலைகளையும் முரண்பாடு இல்லாமல் உரைப்பது கரணானுயோக நூலாம்


60

மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர்
தோவகைஇல் காட்சி யவர்.

 

குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர்.