46

காட்சியோடு ஒப்பதுயம் கானோம் வையத்து
மாட்சி உடையது உயிர்க்கு.

 

இவ்வுலக உயிர்களுக்கு நற்காட்சிக்கு ஒப்பாக பெருமை உடையது வேறு ஒன்றுமில்லை.


நற்காட்சி உடையோர் பெருமை

47

விரதம் இலர்எனினும் காட்சி உடையார்
நரகம் புகுதல் இலர்.

நற்காட்சியைப் பெற்று விரதம் கைக்கொள்ளாவிடினும் அவர் நரகம் புகார்.


48

கலங்கல்இல் காட்சி உடையார் உலகில்
விலங்காய்ப் பிறத்தல் இலர்.

கலங்கமற்ற நற்காட்சியாளர் விலங்காகவும் பிறவார்.


பெண்பிறப்பும் அலிப்பிறப்பும்

49

பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக்
கொண்ட நற்காட்சி யாவர்

 

குறை நீங்கிய நற்காட்சியுடையவர் பெண்ணாகவும் அலியாகவும் பிறவார்.


இழிகுலப் பிறப்பு

50

இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்
பழியறு காட்சி யவர்

இறைவன் அருளிய பழிப்பில்லாத நற்காட்சியுடையவர் எக்காலத்தும் தாழ்ந்த குலத்தில் தோன்றுவதில்லை..