வணங்கத் தகாதார்

41

மிச்சை இலிங்கியர்நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலகத்தோடு ஆறு

 

பொய்க்காட்சியுடைய தவத்தர், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவ்விநயம் ஆகும்.


அவிநய நீக்கம்

42

இவ்வாறும் நீக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது.

 

இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.


நற்காட்சியின் இல்லார் அழிவு

43

காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும்.

நற்காட்சியினால்தான் ஞானமும் , ஒழுக்கமும் நல்ஞானமும், நல்லொழுக்கமுமாகப் பெருமை பெறும்.


44

நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்
ஒற்கா ஒசிந்து கெடும்

 

நற்காட்சி இல்லாரது ஞான ஒழுக்க பெருமைகள் வறிதாகி முறிந்து கெடும்


45

அச்சுஇலேல் பண்டியும் இல்லை சுவர்இலேல்
சித்திரம் இல்லதே போன்று.

 

அச்சு இல்லாமல் வண்டியும், சுவர் இல்லாமல் சித்திரமும் இல்லாமல் மற்றவை இல்லை.