அனனு மதன்

171 யாதும் உடம்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன்
மாசுஇல் அனனு மதன்.
 

மற்றவர் செய்யும் தொழில்களுக்கும் உடன்பாடு இல்லாதவன் அதாவது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாதவன் மாசற்ற ‘ அனனு மதன்’ எனப்படுவான்.


உத்திட்டபிண்டன்

172 மனைதுறந்து, மாதவர் தாளடைந்து, நோற்று,
வினை அறுப்பான் உத்திட்டன் ஆம்.
 

இல்லைத்துறத்து மாமுனிவர்பால் சென்று விரதங்களை ,மேற்கொண்டு வினைகளை கெடுக்க முயலும் பக்குவம் அடைந்தவன் ‘ உத்திட்டபிண்ட விரதனாவான்’.


பதினொரு நிலைகலின் இயல்பு

173 முன்னைக் குணத்தொடு தம்தம் குணம்உடைமை
பண்ணிய தானம் எனல்

பதினொரு நிலைகளும் அந்த அந்த நிலைகளுக்குக் கூறப்பட்ட குணங்களோடு தன் தன் முன் நிலைக்குரிய குணங்களையும் உள்ளக்கியதாம் என அறிதல் வேண்டும்.


 

நூலை உணரும் முறை

174 பாவம் பகையொடு, சுற்றம் இவைசுருக்கி
மோவமோடு இன்றி உணர்.

பாவச் செயல், பகையுணர்வு, சுற்றத்தினர்பால் பற்று இவற்றை முறையாக நீக்கி அறியாமை நீங்கி நல்ஞானத்துடன் நடுமைபிறழாது ஆகமங்களை அறிவாயாக


அருங்கலச் செப்பின் சிறப்பு

175 அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மான்பு திரு.
 

அருங்கலச் செப்பு என்னும் இந்நூலினை ஆய்ந்துணர்ந்தவர்கள் மாண்பமைந்த மனித இன்பத்திலிருந்து முக்தி நிலை வரை எய்துவர்.