|
இல்லறத்தார் |
|
| 161 |
பதினோர் நிலைமையர் சாவகர் என்று விதியின் உணரப் படும் |
|
நமது ஆகம நெறிப்படி இல்லறத்திலிருப்போர் பதினோரு நிலையினர் என்பதை உணரல் வேண்டும். |
|
|
|
|
|
தரிசனிகன் |
|
| 162 |
காட்சியில் திண்ணனாய், சீல விரதம் இலான் மாட்சிஉறு தரிசன் ஆம். |
|
நற்காட்சியில் உறுதியுடையவன், ஆனால் விரதங்களை ஏற்காதவன் தரிசனிகன். |
|
|
|
|
|
விரதிகன் |
|
| 163 |
வதம் ஆஐந்தும் சீலம்ஓர் ஏழும்தரித்தான் |
|
ஐந்து அணுவிரதங்களையும் , எழு சீலங்களையும் ஏற்று ஒழுகுபவன் ஆகமப்படி விரதிகன் எனப்படுவான். |
|
|
|
|
|
சாமாயிகன் |
|
| 164 |
எல்லியும், காலையும் ஏத்தி நியமங்கள் வல்லியான் சாமா யிகன். |
| இரவும் பகலும் ஏற்ற நேரத்தில் நாள் தவறாது ஆன்ம சிந்தனைச் செய்யும் ஆற்றலுடையோன் 'சாமாயிகன்' . | |
|
|
|
|
போசதுபவாசன் |
|
| 165 |
ஒருதிங்கள், நால்வகைப் பவ்வமே, நோன்பு புரிபவன் போசன் ஆம். |
| மாதத்தில் நான்கு திதிகளில் உண்ணாவிரதத்தை ஏற்பவன் போசதன் ஏன்னும் ' புரோசதோபவாசன்' எனப்படுவான். | |
|
|