அச்சித்தன்

166 பழம், இலை காயும், பசிய துறந்தான்
அழிவுஅகன்ற அச்சித்தன் ஆம்
 

இலை, காய், கனியாத பழங்கள் வற்றை உண்ணாது ஒதுக்கியவன் குற்றமற்ற அச்சித்தன் என்னும் ' சத்சித்த விரதனாகும்.'


இரவு உண்ணான்

167 இருளின் கண் நால்வகை ஊணும் துறந்தான்
இராத்திரிஅ புக்தன் எனல்.
 

இரவில் நால்வகை உணவுகளில் எதையும் உண்பதில்லை என நீக்கியவன் ' இரத்திரி அபுக்தன்' எனப்படும்.


பிரமசாரி

168 உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துஉணர்ந்து, காமம்
அடங்கியான் பம்மன் எனல்.

உடலின் தன்மைகளை நன்கு உணர்ந்து காம உணர்ச்சியை அடக்கியான் பம்மன் எனும் ' பிரமசாரி' எனப்படுவான்.


 

அநாரம்பன்

169 கொலைவரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகில் அநாரம்பன் எனல் .
மிகுதியான உயிர்க் கொலைக்குக் காரணமன தொழில்கள் எதையும் செய்யாதொழிந்து விட்டவன் ’ அநாரம்பன்’ எனப்படுவான்.

அபரிக் கிரகன்

170 இருதொடர்ப் பாட்டின் கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக் ரகன்.
  அகப்பற்றுக்களில் மனதைச் செலுத்தாது ஆர்வத்தை அடியோடு நீக்கியவன் ‘அபரிக் கிரகன்’ என்னும் நிலைக்குரியவன்.