|
எடுத்துக் காட்டுகள் |
|
| 146 |
இறுவைக்கண் நான்கும் பெறுவாம் என்றுஎண்ணி மறுஆய நீக்கப் படும். |
|
இருதிகாலத்தில் அறிவு, காட்சி, பலம், சுகம் ஆகிய உயிர்த்தன்மைகளை அடைவோம் என்ற உறுதியுடன் தீய எண்ணங்களை நீக்குதல் வேண்டும். |
|
|
|
|
| 147 |
பற்றொடு செற்றமே அற்றம் தொடர்ப்பாடு முற்றும் துறக்கப் படும் |
|
ஆசை, செற்றம், சுற்றம், பற்று இவற்றை அறவே நீக்குதல் வேண்டும் |
|
|
|
|
| 148 |
ஆலோ சனையின் அழிவுஅகற்றி, மாதவன்கண் மீள்வுஇன்றி ஏற்றுக் கொளல். |
|
உயிர் நெறியினின்றும் மனம் மாறுபட்டுச் சென்று தான் ஏற்ற விரதத்திற்குக் குறை நேர்ந்திருந்தால் அதை ஒளிக்காமல் குருவினிடம் வெளிப்படுத்தி மீண்டும் விரதத்தில் நிலைத்ருத்தல் வேண்டும். |
|
|
|
|
| 149 |
கசிவு கலக்கம் அகற்றி மனத்தை ஒசியாமல் வைக்க உவந்து |
|
இளக்கமும் கலக்கமுமின்றி மனத்தை நிலையாக மகிழ்ச்சியுடன் ஆன்மத் தியானத்தில் இருத்த வேண்டும். |
|
|
|
|
|
உண்ணாமை- பருகாமை |
|
| 150 |
ஊனொடு பானம் முறைசுருக்கி, ஓர்ந்தூணர்ந்து மானுடம்பு வைக்கப் படும் |
|
முறையாக உண்பதையும் பருகுவதையும் குறைத்து, மருமைக்கு உறுதியானவற்றை ஆய்ந்தறிந்துப் பெறுதற்கரிய உடலினின்று நீங்குதல் வேண்டும். |
|
|
|