|
எடுத்துக் காட்டுகள் |
|
| 141 |
சிரிசேன், இடபமா சேனையே,பன்றி உரைகோடல் கொண்டை, உரை. |
|
ஸ்ரீசேணன், விருக்ஷப சேனை, பன்றி, கௌண்டேசர் இவர் நம் வரலாறுகள் தானங்கள் பயனுக்கு எடுத்துகாட்டுகளாம். |
|
|
|
|
|
விருந்தோம்பலை வீணாக்குவன |
|
| 142 |
பசியதன் மேல்வைத்தல், மூடல், மறைத்தல் புரிவுன்மை, எஞ்சாமை கேடு |
|
ஆகாரத்தைப் பச்சையிலையில் வைப்பதும்,அதனால் மூடுவதும், பச்சைப் பொருள்களைக் கலந்து மறைவாகத் தருவதும், பற்றின்றி அளிப்பதும், காலந்தவறி கொடுப்பதும் அதிசாரங்களாகும். |
|
|
|
|
|
துறவறத்தாற்கு |
|
|
பூசை |
|
| 143 |
தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை ஓவாது செய்க உவந்து. |
|
தேவாதி தேவனாகிய அருக பெருமானின் அழகிய திருவடிகளுக்கு மகிழ்ச்சியுடன் இடையறாது பூஜை முதலியவற்றைப் புரிதல் வேண்டும். |
|
|
|
|
|
வழிபாட்டின் வெற்றிக்கு சான்று |
|
| 144 |
தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல் மையுறு தேரை உரை |
|
அருக பெருமானின் அடிகலைப் பூஜிப்போர் அடையும் சிறப்பினை அறிய கரிய தவளையின் வரலாறு எடுத்துக்கட்டாகும். |
|
|
|
|
|
வடக்கிருத்தல் |
|
|
சல்லேகனை |
|
| 145 |
இடையூறு, ஒழிவுஇல்நோய், மூப்பு, இவைவந்தால் கடைதுறத்தல் சல்லே கனை |
|
பலவழிகளில் வரும் துன்பங்கள், தீராத னோய், மிக்க மூப்பு வை காரணமாக தொழில் புரிவதையும், உணவுகொள்வதையும் ஒழித்து நிற்றல் சல்லேகனை எனப்படும். |
|
|
|