| 136 |
இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே |
|
துறவியர் மேலான இல்லறத்தோர் இவர் தம் துன்பங்களைப் போக்குதல் தன் ஆற்றலுக்கேற்ப உதவுதல் ஆகியவையும் வையா விருத்யம் எனப்படும். |
|
|
|
|
|
உத்தம தானம் |
|
| 137 |
உத்தமரக்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது உத்தம தானம் எனல் |
|
மேலான துறவியர்க்கு ஒன்பது வகையான உயர் முறைபடி உணவளித்தல் மேன்மையான ஆகார தானம் எனப்படும். |
|
|
|
|
|
இரட்டைக் கொடைகள் |
|
| 138 |
உத்தம தானம் தயாதானம் தம்மளவில் |
|
தமது சக்திக்கேறற்ப மாமுனிவர்களுக்கு அபயமளிதல் உயிர்களுக்கு அபயமளித்தல் ஆகிய இவற்றை மகிழ்வுடன் இடையறாது செய்வார்களாக. |
|
|
|
|
|
துறவியர்க்கு வழங்கலின் பயன் |
|
| 139 |
மனைவாழ்க்கை யாலவந்த பாவம் துடைத்தல் மனை நீத்தார்க்கு ஈயும் கொடை. |
|
அனைத்தையும் துறந்த முனிவர்களுக்கு அளிக்கும் ஆகாரதானத்தின் பயனால் இல்வாழ்வில் நம்மையுமறியாமல் சேர்ந்த பாபங்கள் நீங்கும் என்பதாகும். |
|
|
|
|
| 140 |
தான விடயதத்தில் தடுமாற்றம் போம்துணையும் ஈனம்இல் இன்பக் கடல் |
|
இதுவரை கூறிய தானங்களினால் பிறவிப்பிணி நீங்கி வீடுபெறுகின்ற வரையில் குறைவற்ற கடல் போன்ற இன்பத்தை எய்தலாம். |
|
|
|