| 121 |
உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை |
|
மனம் மொழி செயல்களால் மாறுபடுதலும் சாமாயிகத்தில் விருப்பக் குறைவும் காலத்தில் செய்யாமையும் சாமாயிகத்தின் அதிசாரங்களாம். |
|
|
|
|
|
உண்ணா விரதம் |
|
| 122 |
உவா அட்டமியின்கண் நால்வகை ஊணும் அவாஅறுத்தல் போசதம் என் |
|
சதுர்தசி அட்டமி ஆகிய திதிகளில் நால் வகை உணவிலும்
விருப்பமின்றி இருத்தல் போசாத உபவாசம் எனப்படும். |
|
|
|
|
|
உண்ணாநோன்பின் போது வேண்டாதவை |
|
| 123 |
ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து |
|
மகளிர் ஐம்பாவச் செயல்களையும் ஆடவர் அறுவகைத் தொழில்களையும் நீக்கி நீராட்டு
மலர்ச்சூட்டு சந்தனம் முதலியவற்றை ஒதுக்குதல் வேண்டும் |
|
|
|
|
|
நோன்பின் போது வேண்டத்தகுவன |
|
| 124 |
அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல் |
|
உபவாச காலத்தில் அறம் கேட்டல் சிந்தித்தல் பிறருக்குரைத்தல் இவற்றைத் தவறாது மேற்கொள்ளல் வேண்டும். |
|
|
|
|
|
ஒரு வேளை உண்ணுதல் |
|
| 125 |
உண்டி மறுத்தல் உபவாசம் போசதம் |
|
நால்வகை உணவினை அறவே நீக்குதல் உபவாசம் என்றும் ஒரு வேளை ஏற்றல் போசதம் என்றும் கூறப்படும் |
|
|
|