நல்லனவே நினைத்தல்-சொல்லல்-செய்தல்

116

தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொற்செய்கை
மனத்தினில் சிந்திக்கற் பாற்று.

 

தனது உயிருக்கும் மற்ற உயிர்களுக்கும் மனம் மொழி செயல்களால் நன்மையே பு¡¢ய சிந்தித்தல் வேண்டும்.


மறந்தும் தீயன நினையாமை

117 பிறர்கண் வருத்தமும் சாகாடும் கேடும்
மறந்தும் நினையாமை நன்று
 

பிறரை வருதத்தவோ கெடுக்கவோ கொல்லவோ மனதாலும் நினையாதிருத்தல் நன்மை பயப்பதாகும்.


 

வேண்டா உறவு

118

திருந்தார் பொருள்வரவும் தீயார் தொடர்பும்
பொருந்தாமை சிந்திக்கற் பாற்று.

கட்டவர்கள் முலம் பொருள் திரட்டலும் தீயோர்களுடன் நட்பு கொள்வதும் பொருந்தா என்பதை உணர்தல் வேண்டும்.
 


 

ஆத்மா ஒன்றே நிலையானது

119

கூடியவை எல்லாம் பி¡¢வனவாம்; கூடின்மை
கேடுன்மை சிந்திக்கறற் பாற்று

சேர்ந்த அனைத்தும் நிலையற்றன விலகுவன என்ப¨தையும் உயிர் நிலையானது பிறவற்றோடு கூடாதது என்பதையும் உணர்தல் வேண்டும்


120

நல்லறச் சார்வும் நவைஅற நீக்கலும்
பல்வகையால் பார்க்கப்படும்

 

உயர் அறத்தின்பால் பற்றுக் கொண்டு துன்பதத்திற்குக் காரணமான வினைகளை நீக்கும் உறுதியினைப் பலவகையாலும் உணர்தல் வேண்டும்.