சாமாயிகம் முழுமையாக நிறைவு பெறுதல்

111

பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம்.

 

நல்லதோர் சூழலைப் பெற்று ஆற்றலுக்கேற்ற வகையில் மகிழ்ச்சியுடன்
எண்ணிய காலம் வரை சாமாயிகத்தை மேற்கொண்டால் அது நிறைவைத் தரும்.


உடல் வேறு உயிர் வேறு

112 தனியன் உடம்புஇது; வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப் படும்.
 

சாமாயிகத்தின்போது இவ்வுடம்பு சுற்றம் முதலியன வேறானவை உயிருக்கும் இவற்றிற்கும் உறவில்லை என்பதை சிந்தித்தல் வேண்டும்.


 

வருந்துதலும் திருந்துதலும்

113

இறந்தன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்தொழியா மீட்டல் தலை.

தான் செய்த தீமைகளுக்குத் தன்னை இழிதத்து நிந்தித்து மீண்டும் தவறியும் அவ்வாறு நேராது அடங்கிப் போற்றுதல் சாமாயிகத்தின் சிறப்பாகும்.


114

தீயவைஎல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித்
து¡யவழி நிற்றலும் அற்று.

தீவினைக்குக் காரணமானவற்றைச் செய்யாது அடங்கி உயர் நெறியில் நிற்றலும் சாமாயிகம் ஆகும்


 

வருந்துக

115

ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையே
நின்று நினைந்துஇரங்கறற் பாற்று

 

சாமாயிகம் செய்வோர் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளைப பற்றிச் சிந்தித்து இரங்குதல் வேண்டும்.