|
பரிமாண விரதத்தின் இயல்பு |
|
| 106 |
வேட்கை, வழிநினைப்பு,துய்ப்பு மிகநடுக்கு, |
|
நீக்கிய பொருள்களை விரும்புவதும் அவை பெறும் வழிச் சிந்திப்பதும் அவற்றை துய்த்தலும் தளர்வதும் விரதம் நினையாமையும் அதிகாரங்களாகும் |
|
|
|
|
|
சிக்கா விரதம் |
|
|
சாமாயிகம் |
|
| 107 |
கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம் விட்டுஒழுகல் சாமா யிகம் |
|
ஏற்றுக் கொண்ட உறுதி குலையாமல் கொலை முதலிய ஐம்பாவங்களையும் நினையாது ஆன்மத் தியானத்தில் நிலைத்தல் சாமாயிகம் எனப்படும். |
|
|
|
|
|
கட்டுகளாவன |
|
| 108 |
கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை |
|
ஆடைகள் அவிழாமை தலைமயிர் கலையாமை விரல் பிกขயாமை நிலை குலையாது நிற்றல் அமர்தல் கட்டு எனப்படும். |
|
|
|
|
|
சாமாயிக விரத்திற்கு உரிய இடங்கள் |
|
| 109 |
ஒருசிறை இல்லம் பிறவுழி யானும் |
|
இல்லத்தின் ஒரு பக்கத்திலோ அல்லது வேறு அமைதியான இடங்களிலோ சாமாயிகத்தை மேற்கொளள்ள வேண்டும். |
|
|
|
|
|
சாமாயிக விரத்திற்கு உரிய காலம் |
|
| 110 |
சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய் |
|
இறைவன் திருஉருவங்களை வணங்குங்கும் போதும் உபவாசம் மேற்கொள்ளும் காலத்தும் சாமாயிகம் கொள்ளுதல் வேண்டும் |
|
|
|